பெண் ஊழியரிடம் அத்துமீறல் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா, இலங்கையின் கண்டியில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சல்மான் மிர்சா வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட ARY News-இல் பணிபுரியும் ShahidHashmi மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார். Related Link கொல்கத்தாவில் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்