news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பேசும் போது நிதானம் வேண்டும் என சிவசங்கர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பேசும் போது நிதானம் வேண்டும் என சிவசங்கர் விமர்சனம்

விஜயபாஸ்கர்களை வைத்துக் கொண்டு...

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜயபாஸ்கர்களை மேடையில் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் முதலமைச்சர் விஜய் என்று கூறி உள்ள முன்னாள் அமைச்சர் சிவசங்கர்,
திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்றவரால், கரூருக்கு செல்ல முடியவில்லை; இடைத்தேர்தல் காரணமாகவே, இப்போது கரூருக்கு சென்றிருக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

285 நாட்கள் கழித்து...
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது;
கரூர் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் விஜய் கரூர் சென்று உள்ளார். கரூர் துயரம் நடந்த பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய் மகிழ்ச்சியாக இருந்தார். கரூர் சம்பவம் நடந்து 285 நாட்கள் கழித்து விஜய் கரூர் சென்றிருக்கிறார். இத்தனை நாளும் மன வலியோடுதான் இருந்தாரா விஜய்?
கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் வரும் வரை காத்திருந்து உள்ளார். கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் விஜய். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கியிருப்பவர் கரூர் விஜயபாஸ்கர்.

முதல்வர் என்பதை மறந்து...
கரூரில், நினைவு மண்பத்தில் விஜயின் முதுகே நினைவுச் சின்னமாக வைக்கப்பட வேண்டும். இன்று விஜய் கரூர் கூட்டத்துக்கு செய்த ஏற்பாட்டை அன்றே செய்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. முதலமைச்சர் என்பதை மறந்து காவல் துறையையே குற்றம் சாட்டுகிறார். எந்த கட்சி தலைவரும் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என கூறியவர் மு.க.ஸ்டாலின். தாங்கள் செய்த தவறை மறைத்துவிட்டு முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டுகிறார். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீர்கள் ஆனால், மனதில் வலி இருப்பதாக கூறுகிறீர்கள்.

விடியலே பிடிக்காது...
தவெக அரசின் வழக்கறிஞர் நியமனம் சந்தி சிரிக்கிறது. ஊழலற்ற ஆட்சிக்கு அரசு வழக்கறிஞர் நியமனமே போதும். மின்சார பிரச்சனை தொடர்பாக, இன்று வரை போராட்டம் தொடர்கிறது. பேச வேண்டிய இடங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை, ஆனால் பொதுக் கூட்ட மேடைகளில் வீர வசனம் பேசுகிறார். விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும், நிதானத்துடன் பேச வேண்டும். முதல்வர் விஜய்க்கு விடியலே பிடிக்காது என்பதால் மகளிர் விடியல் பயணத் திட்டப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வறு சிவசங்கர் கூற உள்ளார்.

Related Link
காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, மதுரை கோர்ட் அதிரடி

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, மதுரை கோர்ட் அதிரடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்

2
13 mins agoshare
ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau