Also Watch
Read this
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மூன்று லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை தவெக அரசே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தவெக ஆட்சியில் மக்கள் குமுறல் - மு.க.ஸ்டாலின்

கால அவகாசம்...
சமூக ஊடகங்களில், மக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்த குளறுபடி ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ரீடீங்,சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.