Also Watch
Read this
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால், காவல் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார். திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? என்றும் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர் மவுனம் - உதயநிதி விமர்சனம்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை தருகிறது. காவலர்கள் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
காவல் மரணங்களின் போது, துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.