Also Watch
Read this
By: Web Team

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட சார்பு ஆய்வாளரை, சிறுவன் அரிவாளோடு துரத்திய சம்பவம், திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு அவவலத்தை நிரூபிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால், சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு, தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 4 ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும், தற்போது சிறார்கள் வரை போதை பொருளால் பாதிக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.