Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 02:37 PM
By: Manigandan Raja

கேப்டன் பொறுப்பில் மாற்றம் :
ராஜஸ்தான் அணி வேறு உரிமையாளர்களிடம் கைமாறிய நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பிலும் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் அணியின் புதிய உரிமையாளரான 'கால் சோமானி' ((Kaal Somani)), யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியின் கேப்டனாக நியமிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இதுபோல் நடந்தால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே தற்போதைய கேப்டனான ரியான் பராக்கை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கால் சோமானி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தீவிர ரசிகர் என்றும், அவரை அணியின் எதிர்காலமாக கருதுவதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved