Also Watch
Read this
By: Manigandan Raja

மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ :
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஏப்ரல் 17ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் 15 பேர் கொண்ட வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மிரிதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் உள்ள நிலையில் இளம் வீராங்கனைகளான காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் முதல் முறையாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved