Also Watch
Read this
By: Web Team

நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாக மாறியதில் 12 வயது சிறுவன் உள்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஃபேஸ்புக், யூடியூப், டிக் டாக் உள்பட 26 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கும், நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் குற்றஞ்சாட்டி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் படையால் தலைநகர் காத்மண்டு வெலவெலத்து போனது. தடையை மீறி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த பதிலுக்கு இளைஞர்கள் கல்லெறிய நிலைமை கைமீறி போனதால் வேறுவழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு மோசமான சூழல் உருவானது....