Also Watch
Read this
By: Manigandan Raja

அதிபருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி ரத்து செய்தது :

அமெரிக்க அதிபர் டிரம்ப் H-1B விசாக்களுக்கு விதித்திருந்த சுமார் 83 லட்சம் ரூபாய் கட்டண உயர்வை, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2-வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப், H-1B விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலர் அதிரடியாக உயர்த்தினார். இதை எதிர்த்து, பல்வேறு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் துப்பாக்கிச் சூடு :
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். அரசுக்கு எதிராக போராடி வரும் கூட்டு அவாமி அதிரடிக் குழுவை சேர்ந்த நபர், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம், ராவலகோட்டில் நடைபெற்றபோது, மக்கள் ராணுவத்திற்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் :
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டோனா பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக கட்டடங்கள் சரிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு மணி நேர இடைவெளியில் ரிக்டர் அளவில் 7.8, 6.4 மற்றும் 6.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுமார் 40 சதவிகித கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
ஓமன் கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பல் :

ஓமன் கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பலில் பணியாற்றிய 24 மாலுமிகளை மீட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கப்பலில் பணியாற்றிய 24 இந்திய மாலுமிகள் உதவி கோரிய நிலையில், கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் மீட்கப்பட்டனர். அந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.