Also Watch
Read this
By: Web Team

நேபாளத்தில் கலவரத்தை பயன்படுத்தி சிறைகளில் இருந்து தப்பிய 60 கைதிகள் இந்திய எல்லை மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். சர்வதேச எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் நேபாள நாட்டின் சிறைகளில் இருந்து தப்பிய 60 கைதிகளை பிடித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் கடந்த 2 நாட்களில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தின் எல்லை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.