Also Watch
Read this
By: Web Team

மெக்சிகோ,ஒப்பந்தப்படி அமெரிக்காவிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அதன் மீதான வரியை 5 சதவிகிதம் அதிகரிப்பதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மெக்சிகோ- அமெரிக்கா இடையே உள்ள நீர் பகிர்வு ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மெக்சிகோ அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும். கடுமையான வறட்சி காரணமாக, மெக்சிகோ ஒப்பந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டிசம்பர் 31 க்கு முன் மெக்சிகோ தண்ணீரை வழங்கவில்லை என்றால் அதன் மீது 5 சதவிகித வரியை விதிக்கப்படும் என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved