Also Watch
Read this
By: Admin News Tamil

ஈரான் எறிகனை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு :
போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் எறிகனை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
ஈரானால் அங்கீகரிக்கப்படாத பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெஹ்ரான் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70% இந்தியர்கள் விசாவை நிராகரித்தது கனடா அரசு:

FIFA கால்பந்து உலகக்கோப்பையைக் காண விண்ணப்பித்த 70 சதவிகித இந்தியர்களின் விசாவை கனடா நிராகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகிள்ளது.
கனடாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக, அதிகபட்ச விசா விண்ணப்பங்கள் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா போட்டியை காண்பதற்கான விசா என்ற பெயரில் குடியேற்றம் தொடர்பான மோசடிகள் நிகழ வாய்ப்புள்ளதாக கனடிய அதிகாரிகள் எச்சரித்தனர்.