Also Watch
Read this
By: Web Team

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பியது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்தி நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஐ. நா.தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருள்கள், ஆயிரம் டெண்ட்டுகள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியதாக இந்திய வெளியறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.