Also Watch
Read this
By: Manigandan Raja

3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் 24 மணி நேரத்தில் மட்டும் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ட்ரோன்கள் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக லண்டன் கடல்சார் வணிக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஓமன் கடற்கரை அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல் எதிரொலி

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஜூன் மாதத்தில் ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
மேலும், ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்துள்ள அமெரிக்கா, எண்ணெய் வாங்குபவர்கள் ஜூலை 17-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள கெடு விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவையற்றது, ஆபத்தானது எனவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.