Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தோனேசியா வாங்குவதாக ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவிடம் இருந்து, "பிரம்மோஸ்" மற்றும் "அஸ்திரா" ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் உட்பட 12 ஒப்பந்தங்கள் இந்தோனேசியாவிடம் நேற்று கையெழுத்தாகின. இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டவுடன் ஜகார்த்தாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகள் இடையே ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாகிஸ்தான் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
பாகிஸ்தான் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். பிறகு, பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 8 வீரர்களையும் மீட்டனர். பலூசிஸ்தான் மாகாணம் ஜியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சரக்கு விமானம் அரபிக் கடலில் மாயம்

5 பணியாளர்களுடன் சரக்கு விமானம் அரபிக் கடலில் காணாமல் போனதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானத்தில் நேற்று இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், இரவு 9.22 மணிக்கு மிக வேகமாக கீழே இறங்குவது ரேடாரில் காணப்பட்டதாகவும், சுமார் 155 கடல் மைல் தொலைவில் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.