இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஹெஸ்பொல்லாவின் பீரங்கித் தலைவரான Zaid Ali Jumaa லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதற்குப் பொறுப்பேற்றதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டு மவுண்ட் டோவில் நடந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலுக்கும் அவர் தலைமை தாங்கியதாகவும் அப்போது ஒரு இஸ்ரேல் ராணிவ அதிகாரி மற்றும் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. Related Link இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த மேலும் ஒரு ஈரான் கப்பல்