Also Watch
Read this
By: Web Team

தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டிருக்க நேதன்யாகு அதில் பேசிக்கொண்டிருந்தார். டிரம்பின் வற்புறுத்தலின் பேரில் நேதன்யாகு கத்தார் பிரதமரிடம் இறையாண்மையை மீறியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.