Also Watch
Read this
By: Web Team

நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரவிய தகவலை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தில் பாகிஸ்தான் கராச்சி சிறையில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கொடிய கைதிகள் தப்பிச் சென்றனர்.
தப்பிய கைதிகளை நோக்கி பாதுகாவலர்கள் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்த தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கைதிகள் திருப்பி தாக்கியதில் பாதுகாவலர்கள் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
கைதிகள் சிறையில் இருந்து தப்பியதை தொடர்ந்து கராச்சி நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கராச்சியில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்ட போது சிறைக்கைதிகள் சுமார் ஆயிரம் பேர் சிறை வாயிலை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது அவர்களில் பலர் சிறைக்காவலர்களின் துப்பாக்கிகளையும் பறித்துக் கொண்டு ஓடினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved