Also Watch
Read this
By: Web Team

இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ஐ.நா., அமைப்பின் 80-வது பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய டிரம்ப், தனக்கு நோபல் பரிசு தரவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 7 போர்களை நிறுத்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் வகையில் பேசியது, கூட்டத்தில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved