Also Watch
Read this
By: Web Team

நேபாள கலவரத்தின்போது சிறைகளில் இருந்து தப்பியோடிய 3 ஆயிரத்து 700 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மெல்ல மெல்ல பதற்றம் தணிந்த நிலையில் சுசீலா கார்கி தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வன்முறையின்போது தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தலைமறைவாகவுள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் மற்றும் ராணுவத்தினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் தோஹாவில் அரபு-இஸ்லாமிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை