Also Watch
Read this
By: Manigandan Raja

ஜோர்டான் விமானத்தளம் மீதான தாக்குதல் பற்றி ஈரான் தகவல்
ஜோர்டான் விமானத்தளம் மீது நடத்திய தாக்குதலில், அமெரிக்காவின் 3 எப் - 35 விமானங்களை அழித்து விட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் குயிஷம் தீவில் 2 குடியிருப்புகள் மீது அமெரிக்கா குண்டு வீசியதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில், 3 எப் - 35 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், பல விமானங்கள் சேதமடைந்ததாகவும், அமெரிக்க வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பும் முன்பு ஷேக் ஹசீனா கைது செய்யப்படுவார்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு கைது செய்யப்படுவார் என அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் அசாதுஜமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு உரிமை உள்ளது என்றாலும், சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர், வங்கதேச குடிமகள் என்ற நிலையில், நாடு திரும்பி சட்டத்தை மதித்து சரணடைய விரும்பினாலும், சட்டம் தங்களுக்கு அளித்த அதிகாரத்தை தாங்கள் பயன்படுத்துவோம் என்றார். மேலும், அவரின் பாஸ்போர்ட்டை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ரத்து செய்துள்ளதால், அவர் நாடு திரும்புவது என்பது சாத்தியமில்லை என்றார்.