சென்னையில் கடந்த 12 நாட்களில் மட்டும் 30 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், மாநகரில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை 103 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
00 Comments
Leave a comment