சென்னை

செருப்பு குடோனில் திடீர் தீ விபத்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை மடிப்பாக்கத்தில் செருப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. செருப்பு விற்பனை கடையின் முதல் தளம் குடோனாக செயல்பட்ட நிலையில், அதில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கடையில் இருந்த காலணிகள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகின. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

செருப்பு குடோனில் திடீர் தீ விபத்து  தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

00 Comments

Leave a comment