மக்களவை தேர்தல் முடிந்த பின் பல திட்டங்களை உள்ளடக்கிய 100 நாள் வளர்ச்சித் திட்டத்தை ரயில்வே அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரத்தான பயணக்கட்டணத்தை 24 மணி நேரத்திற்குள் திரும்ப அளிக்கும் முறை, ரயில்வே வழங்கும் வசதிகளை அறிந்து கொள்ள சூப்பர் ஆப் , மூன்று பொருளாதார ரயில்வே வழித் தடங்கள், படுக்கை வசதி உள்ள வந்தே பாரத் ரயில்கள் என பல்வேறு திட்டங்கள் அதில் இடம்பெறும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரயில்வே பொருளாதார தடங்கள் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் செலவில் சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் 1,300 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களை போன்று மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா
00 Comments
Leave a comment