Also Watch
Read this
By: Manigandan Raja

பணம் கேட்டு மிரட்டல் :
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம், கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கோடிக்கணக்கில் பணம் கேட்டு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்தது குறித்து, மும்பை போலீஸாரிடம் ரன்வீர் சிங் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.