Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது
விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் "சீயான் 63" திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விக்ரமுடன் ரியா ஷிபு, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஷாமி திலகன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்ரம் - நயன்தாரா இணைந்து நடித்த இருமுகன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகி பாபு நடித்துள்ள "அர்ஜுனன் பேர் பத்து" படம்
நடிகர் யோகி பாபு நடித்துள்ள "அர்ஜுனன் பேர் பத்து" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேதா வரிகளில் உருவான "பொறு மனமே பொறு" பாடலை ஹிருதய் தபஸ்வி மற்றும் சௌந்தர்யா பாலா நந்தகுமார் ஆகியோர் இணைந்து பாட, டி.இமான் இசையமைத்துள்ளார்.

"உணர்ச்சி வேகத்தாலே என்றும் எதுவும் மாறிடாதே, அமைதி காப்பதாலே ஒன்றும் அறங்கள் மாய்ந்திடாதே" மற்றும் "மாற்றம் ஒன்றுதானே இயற்கை உண்மை இங்கே" என்கிற தத்துவ வரிகள் மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன.