Also Watch
Read this
By: Manigandan Raja

பிரேசில் வீரர் நெய்மர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் வீரர் நெய்மர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 16வது சுற்று ஆட்டத்தில் நார்வே அணிக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சியை தோல்வியை சந்தித்தது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத 34 வயதான நட்சத்திர வீரர் நெய்மர், கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், பிரேசில் அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டதாகவும், தனது ரத்தத்தையும், உயிரையும் கொடுத்து விளையாடியதாகவும், இனிமேல் விளையாட தனக்கு விருப்பமில்லை, எனக் கூறி தனது ஓய்வை நெய்மர் அறிவித்தார்.
அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்க்யா ரஹானே, அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஹானே இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்த்து 8,414 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 15 சதங்களும் 51 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,077 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், ரஹானே 6 போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தினார். அவற்றில் 4 போட்டிகளில் அணி வெற்றி பெற்றது மற்றும் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன.