Also Watch
Read this
By: Manigandan Raja

பாரா தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்
காமன்வெல்த் மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்று அசத்தினார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடைபெற்று வருகிறது.
பாரா தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்றார். இதேபோட்டியில் மற்றொரு மாற்றுதிறனாளி வீரரான முகமது பாசில் 2வது இடம் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளி வென்று கொடுத்தார்.
அதேபோல, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றார். இதுவரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தற்போது 8 வது இடத்தில் உள்ளது.
மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது முதல் நாள் இன்று துவங்கிய அலைச்சறுக்கு
போட்டியில் 14 வயது, 18, வயது, (Open) திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெறும் அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட 9 மாநிலத்தை சேர்ந்த 80 அலைச்சறுக்கு வீரர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு சீறி வரும் கடல் அலையில் அலைச்சறுக்கு செய்து தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவளத்தில் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெறுபவர்கள் செப்டம்பர் மாதம் ஆசிய அளவில்
நடைபெறும் அலைச்சறுக்கு போட்டியில் வீரர்கள் பங்கேற்பார்கள் என தகவல்.