Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் அருகே ஒன்றையொன்று முந்த முயன்ற சுற்றுலா வேனும், காரும் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர்கள் சென்ற வேனும், கீழக்கரையில் இருந்து ஐடி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் ஓட்டி சென்ற காரும் நதிப்பாலம் பகுதியில் விபத்தில் சிக்கின.
வேனில் வந்த 13 வயது சிறுமி மகாலட்சுமி மற்றும் வெங்கடேஷ் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved