Also Watch
Read this
By: Manigandan Raja

ஹர்திக் பாண்டியாவை அணிக்குக்குள் கொண்டுவர பரிந்துரை :
ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எம்.எஸ். தோனி பரிசீலித்து வருவதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைந்துள்ள புதிய இளம் சிஎஸ்கே அணியில் அனுபவம் உள்ள வீரரை சேர்க்க ஹர்திக் பாண்டியாவை அணிக்குக்குள் கொண்டுவருமாறு தோனி நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வருத்தம் :

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வருத்தம் தெரிவித்தார். தோல்விக்கு பிறகு பேட்டியளித்த அவர், எந்தவொரு எதிரணியையும் ஒருபோதும் சாதாரணமாக எடைபோடக் கூடாது என தெரிவித்தார். அப்படிச் செய்தால், இது போன்ற முடிவுகளையே சந்திக்க நேரிடும் எனக் கூறினார்.
இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து வெற்றி :

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி 2 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங்காடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.