Also Watch
Read this
By: Web Team

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சிகள் 5 பேரின் வீடுகளில் சைரனுடன் கூடிய அலாரம் மற்றும் கதவுகளுக்கு லென்ஸ் பொருத்தப்பட்டது.
அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சிகளான வழக்கறிஞர் கார்த்திகை ராஜா, அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ பதிவு செய்த சதீஸ்வரன், அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி சாட்சிகளின் வீட்டில் அலாரம், கதவுகளில் லென்ஸ் பொருத்தி கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.