Also Watch
Read this
By: Manigandan Raja

கூடலூரைச் சுற்றியுள்ள பந்தலூர், தேவாலா சேரம்பாடி, சேரங்கோடு, அய்யங்கொள்ளி , என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் நாள்தோறும் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கையுண்ணி கிராமத்தில் வீட்டின் முன்பு உலா வந்த யானை நீண்ட நேரம் அங்கிருந்த தாவரங்களை சாப்பிட்டது பின்பு வீட்டில் கேட்டை துதிக்கையால் தள்ளி உடைத்து சேதப்படுத்தியது இந்த காட்சிகளை வீட்டில் இருந்தவர்கள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ள நிலையில் வனத்துறையினர் உடனடியாக யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.