Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள எல்லபாளையம் பகுதியில், மின்மாற்றியில் (Transformer) ஆயில் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஒரு வீட்டின் முன் இருந்த மின் மாற்றி கொழுந்து விட்டு திகுதிக்கு என எரிந்தது இதனை பார்க்த அக்கம்பக்கத்தினர் மின்வாரியத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், மின்சாரத்தை நிறுத்திவிட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.