Also Watch
Read this
By: Manigandan Raja

காரில் கட்டி இழுத்துச் சென்ற காட்சிகள்
ஒடிசாவின் பாலசோரில் லட்சக்கணக்கான ரூபாய் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளைக் கும்பல் காரில் கட்டி இழுத்துச் சென்று பணத்தை கொள்ளையடித்துள்ளது. டுடிகாடியா பஜாரில் உள்ள அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ((Tudigadia Bazaar)) காரில் வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் எந்திரத்தை உடைத்து எடுத்து கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றனர்.
அலிபிரி மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் நள்ளிரவில் லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே சிறுத்தை வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை கண்ட பக்தர்கள் அலறி அடித்து கத்தி கொண்டு ஓடினர். உடனடியாக வனத்துறையினர் அங்கிருந்த ஊழியர்கள் கட்டைகளை கொண்டு சத்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டி வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் பக்தர்களை எச்சரித்து மலைப்பாதையில் குழுக்களாகச் செல்லுமாறும் தனியாக செல்ல வேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

கேரளம் மாநிலம் வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. அதிகாலை கூண்டில் சிக்கிய சிறுத்தை மிகவும் ஆக்ரோஷத்துடன் கர்ஜித்ததைக் கண்டு மக்கள் அச்சமடைந்தனர். சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் .