Also Watch
Read this
By: Manigandan Raja

மட்டன் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சண்டை
பீகாரில் நடந்த திருமண விருந்தில் மட்டனுக்குப் பதிலாக சிக்கன் பரிமாறியதால் மணமகன்-மணமகள் வீட்டார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சிம்ரி பக்தியார்பூர் ((Simri Bakhtiyarpur)) நகரில் திருமண விருந்து பட்டியலில் மட்டனுக்கு பதில் சிக்கன் இருப்பதை கண்டு கோபமடைந்த மணமகன் வீட்டினர், பெண் வீட்டாருடன் வாக்குவாதம் செய்தனர்.
ராஜஸ்தான் மருத்துவமனைகளில் 5 பெண்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில், சிசேரியன் பிரசவங்களுக்குப் பிறகு ஆறு நாட்களுக்குள் ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மருத்துமனை நிர்வாகம், மருத்துவச் சிக்கல்களாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வலியுறுத்தினர்.