Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பயணியர் நிழற்குடை கட்ட இருந்த இடத்தினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலம்பாறை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் நிழற்குடை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிழற்குடை கட்டவிடாமல் இடையூறு செய்வதாகக் கூறப்படுகிறது.