Also Watch
Read this
By: Web Team

சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு ((AGS )) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏஜிஎஸ் அலுவலக கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, AGS அலுவலகத்தில் மோப்ப நோய் துணையுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். முடிவில் அது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, இ-மெயில் மூலம் AGS அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved