news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்
tv

Also Watch

tv

Read this

வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்

திருப்பூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லஞ்சம்

திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் ( 36). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஞானசேகரிடம் விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு ரூ. ஐந்தாயிரம் ஞானசேகர் லஞ்சமாக கேட்டுள்ளார்.

பின்னர் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரூ 4,000 ரசாயன பொடி தடவிய பணத்துடன் இன்று தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு கோவிந்தராஜன் வந்தார்.

அங்கிருந்து ஞானசேகரிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார்
ஞானசேகரை கையும் களமாக பிடித்து கைது செய்தனர்.

Related Link
ஓசூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஓசூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
49 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved