news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆசிரியை மீது கார் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

ஆசிரியை மீது கார் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

மேசியாபுரம், திருநெல்வேலி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கார் மோதி விபத்து

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை அடுத்த வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராம். இவரது மனைவி சாரதா (56). இவர் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அங்கு 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்த சாரதா, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது
நெல்லை - சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் மேசியாபுரம் விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் நாகர்கோவிலை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாரதா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாரதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கள்ளை குடித்த காவலர்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கள்ளை குடித்த காவலர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
55 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved