Also Watch
Read this
By: Web Team

விநாயகர் கோயிலில், நள்ளிரவில், உண்டியலை திருடிய மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வைகநல்லூர் அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபம் அருகே விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 20ஆம் தேதி நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், கோயிலின் உண்டியல் மற்றும் சாமிக்கு அலங்கரித்து இருந்த ஆபரணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தற்போது சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குளித்தலை நகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவுகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடுவது அதிகரித்துள்ளது. குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.