Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது பைக்கை மோதிய நபர்கள் அவரை சாலையோரம் தூக்கி வீசி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் மீது மோதினர். படுகாயமடைந்த அவரை இருவரும் சேர்ந்து தூக்கி வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.