Also Watch
Read this
By: Web Team

பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ தொடங்கி உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்தும், பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
அதில், பணிகளை 4 கட்டமாக பிரித்து 2026ஆம் ஆண்டு தொடங்கி 2028 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved