Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 21/06/2026 அன்று எஸ் எஸ் ஹைதராபாத் புதிய கிளை துவங்க உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன அந்த விளம்பரத்தில் இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட சுற்று வட்டார மக்கள் கடையின் திறப்புக்காக காத்திருந்தனர்.
இன்று கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது முதல் கட்டுக்கடங்காத கூட்டம் பிரியாணி கடை முன்பு கூடியது.. இதனால் அங்கு கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து வரிசையில் அனைவரையும் நிற்க வைத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதும் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை 15க்கும் மேல் கிளைகளை சென்னையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved