Also Watch
Read this
By: Manigandan Raja

பொங்கல் தினத்தன்று, காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாடி நடனமாடிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 23 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
பல்லாவரம் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய காவலர்கள், உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, போலீஸாரையும், போலீஸாரை கட்டுப்படுத்தத் தவறியதாக பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களின் ஆய்வாளர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : சாலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்