ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தரகள் குவிந்தனர். சதுரகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் 4500 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்ய மலைப்பாதையில் நடந்து சென்றனர்.இதையும் படியுங்கள் : கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... கர்நாடக அணைகளில் இருந்து 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்