Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கட்டுக்குடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் ஆங்கில பாட ஆசிரியர் ஆரோக்கியசாமியை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தகவலறிந்து வந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved