Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகள் போராட்டம் :
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வேம்புகுடி, அகரமாங்குடி, சுரைக்காயூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மூன்று கிராம மக்கள் அனைத்து சமூகத்திற்கு உள்ளடக்கிய ராஜாங்க வேத சாஸ்திர பாடசாலைக்கு சொந்தமான சுமார் 150-ஏக்கர் விவசாய நிலங்களில், பல சமூக மக்களால் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும்.
ராஜாங்க வேத சாஸ்திர பாடசாலை சுமார் 40-ஆண்டுகளாக இயங்காமல் கைவிடப்பட்ட நிலையில், போலி ஆசாமிகள் பாடசாலை நிர்வாகி என தங்களை கூறிக்கொண்டு, நிலங்களை
அபகரிக்க திட்டமிட்டு, சாகுபடி செய்து வரும் விவசாயிகளை அந்த நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாகவும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி. நிலங்களை சாகுபடி செய்யும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தஞ்சை கும்பகோணம் தேசிய
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேம்புகுடி சுங்கச்சாவடி அருகில் நியாயங்கள் வேண்டி கோஷங்கள் இட்டவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்தவர்கள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.