Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, பெரிய புலியூர் சின்னப்புலியூர் உட்பட சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விவசாயி ஒருவர் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சண்முகம் என்பவர் செகப்பு துண்டு அணிவித்து வந்த ஒருவரை பார்த்து கட்சி பாகுபாடு இன்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் இதில் கட்சி துண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் அவர் இறுதி வரை தனது கட்சித் தொண்டை அகற்ற முடியாது என தெரிவித்தார் அப்பொழுது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது இந்த நாள் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.