Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு பயணம் :
6 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த பயணத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் நியூசிலாந்து செல்வது இதுவே
முதல் முறையாகும்.
அயோத்தி விவகாரத்தில் பிரதமர், அமித்ஷா மவுனம் காப்பது ஏன்?

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவின் மெளனம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தார்.
நிச்சயமாக இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் கத்தார் பயணம் :

4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அலியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக மேற்காசியாவில் போர் நடந்த போது கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.