Also Watch
Read this
By: Manigandan Raja

ஆளும் பாஜக அரசு மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார் :
மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியை அம்மாநில பாஜக அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அம்மாநிலத்தில் தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் 12 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில், சிறுமியின் குடும்பத்தை சந்திக்க திட்டமிட்டதை அறிந்து மமதாவின் வீட்டின் வெளியே ஏராளமான போலீசார் குவிக்க பட்டுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து யாருக்கு கவலை இருக்கிறது?
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து யாருக்குக் கவலை இருக்கிறது? என பாஜக அரசை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
பெண்களுக்காக நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் பாஜக மௌனம் காத்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கனமழை காரணமாக 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து :

மும்பையில் கனமழை காரணமாக மன்குர்ட் ((Mankhurd)) பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழு இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.